There are no items in your cart
Add More
Add More
Item Details | Price |
---|
மனித நேயம் (மனித நேயம் = மனிதம் + நேயம்) தொடர்புடைய பலம் வாய்ந்த குணங்களாக அன்பு, கருணை, இரக்கம் மற்றும் சமூக நுண்ணறிவு இருக்கின்றன. சக மனிதர்களிடம் அன்பு காட்டுவதை மனித நேயம் எனக் கூறலாம். 1893-ல் அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெற்ற உலக மதங்களின் பாராளுமன்றத்தில் அனைவரையும், ‘‘சகோதர... சகோதரிகளே...’’ என்று விவேகானந்தர் உரையாற்றி உலக மக்களிடையே மனித நேயத்தை எடுத்துரைத்தார்.
தமிழ் மொழியில் மனித நேயம்:
"அன்பின் வழியது உயர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு" - திருவள்ளுவர்
கணியன் பூங்குன்றனார் "யாதும் ஊரே யாவரும் கேளீர்"
"வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்" என்றார் வள்ளலார் என்று கூறுகிறார்.
மனிதனின் மாண்பினை மனிதன் அறிந்த அளவில் எந்த மனிதனின் மனமும் வருந்தாமல் இருக்கும் முறையில் ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்வினை நடத்துவான். அந்த ஒளியில், பிற மனிதர் ஏதேனும் துன்பப்பட்டால், அதை இயன்ற வரையில் போக்கி நலமளிக்கும் பண்பும் அவனுக்கு உண்டாகும். இங்குதான் மனிதநேயம் தோன்றுகின்றது, வளர்கின்றது, வாழ்வை வளப்படுத்துகின்றது. இத்தகைய மனிதநேயத்திற்கு உரிய இருப்பு எது? அது இறை ஆற்றலாகிய தெய்வீக நிலையே ஆகும்.
இத்தகைய மனிதநேய உணர்வில் தான் உலகிலுள்ள மக்கள் அனைவரும் வாழ்வில் பிரிக்க முடியாதபடி இணைந்துள்ள உண்மை விளங்கும். ஒவ்வொரு நாளும், காலையிலிருந்து மாலை வரையில் ஒவ்வொரு மனிதரும் உபயோகிக்கும் பொருட்கள் எவ்வாறு அவர்களுக்கு கிடைக்கின்றனவா? உலகம் முழுவதும் உள்ள மனித குலம் அத்தனையும் சேர்ந்து உழைத்ததனால் உண்டான பொருட்கள் ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்வின் வளமாக அமைந்து வருகின்றன. மனிதகுலம் அனைத்தும் வாழ்வதற்கு ஒரே உலகம் தான் உளது. உலகம் மீது உள்ள கடல் ஒன்று தான். அந்தக் கடல் நீர் தான் ஆவியாகி மேகமாகி மழையாக உலகம் முழுவதும் பெய்து, எல்லாப் பயிர்களையும், உயிர்களையும் வளர வைக்கிறது. வாழ வைக்கிறது. நமக்கு வெளிச்சம் அளிக்கும் சூரியனும் ஒன்றே. நாம் மூச்சு விடும் காற்றும் ஒன்று தான்.
PHONE: +91 7904402887 / 04253-292746